தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆஜரானார். தமிழகத்தில் 1968ம் ஆண்டு முதல் தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை சட்டப்பூர்வமாக பின்பற்றப்பட்டு வருகிறது. நவோதயா பள்ளிகள் தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என மும்மொழிக் கொள்கையை பின்பற்றுவதால், இது மறைமுகமாக இந்தி திணிப்புக்கு வழிவகுக்கும். கல்வி என்பது மாநில அரசின் உரிமையின்கீழ் வருகிறது. மத்திய அரசின் பாடத்திட்டம், மொழி விதிகளை அப்படியே அமல்படுத்துவது மாநிலத்தின் தன்னாட்சி உரிமைக்கு எதிரானது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளி அமைக்க சுமார் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு செலவுகளில் மாநில அரசுக்கும் நிதிப் பொறுப்பு உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு வழங்க வேண்டிய 5,000 கோடிக்கு அதிகமான கல்வி நிதி நிலுவையில் இருக்கும்போது, இது கூடுதல் சுமை என வாதிடப்பட்டது. தமிழக அரசின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தனர். தமிழக மண்ணில் இந்தி கற்பிக்கப்படவே கூடாது என்ற பிடிவாதமான மனநிலையை அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். இதை இந்தி திணிப்பாகப் பார்க்காமல், கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்தியா என்பது கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இயங்கும் நாடு. எங்கள் அரசு, எங்கள் கொள்கை என தனித்து இயங்க முடியாது. நவோதயா பள்ளிகள் திட்டம் மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு எதிரானதல்ல. ஆட்சி மாறும்போது மனநிலையிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தமிழக அரசு இன்னமும் விடாப்படியாக இருக்கிறது. இந்தி திணிப்பு மட்டுமே இதற்கு காரணமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசுடன் சுமூகமாக பேசி முடிவெடுக்க அறிவுறுத்தினர். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கு ஏற்ற நிலங்களை கண்டறிய 3 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். இந்தியாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் 650க்கும் மேற்பட்ட நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #NavodayaSchools #SupremeCourt #TamilNaduGovernment #EducationPolicy #NavodayaVidhyalaya #JNVST #LanguagePolitics #HindiImposition #TwoLanguagePolicy #ThreeLanguageFormula #EducationNews #TNPolitics #SupremeCourtVerdict #IndianEducation #RuralEducation
subramanian17-Sep-2026
திமுக ஆட்சியில் இருக்கும்போது ஏன் இந்த கேள்வி கேட்கவில்லை ?
Reelஎதிரியே தெரியாமல் தோற்றது திமுக!
இந்தியா • 17-Sep-2026