திருப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்து வீரர்கள் தேர்வு போட்டி Tiruppur |Football Selection |U14 Football அகில இந்திய கால்பந்து சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கால்பந்து கழகம் சார்பில், 14 வயதுக்குட்பட்ட சப் ஜூனியர் தமிழக கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு, திருப்பூர் மைக்ரோ கிட்ஸ் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. தேர்வு போட்டியை மைக்ரோ கிட்ஸ் பள்ளி தாளாளர் சங்கர், தமிழ்நாடு கால்பந்து கழக கமிட்டி உறுப்பினர் பஷீர், திருப்பூர் மாவட்ட கால்பந்து கழகத் தலைவர் ரத்தினசாமி, செயலாளர் அன்பழகன், முன்னாள் தலைவர் பாலு ஆகியோர் தொடங்கி வைத்து வீரர்களை அறிமுகம் செய்தனர். மாநிலம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடைபெறும் தேர்வு போட்டியின் முடிவில், திறமையின் அடிப்படையில் 16 வீரர்கள் தமிழக சப் ஜூனியர் கால்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் வீரர்கள், தேசிய அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் தமிழக அணிக்காக பங்கேற்க உள்ளனர். தேர்வு போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட கால்பந்து கழக நிர்வாகிகள் மற்றும் மைக்ரோ கிட்ஸ் பள்ளி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ReelManchester United - League Champions EPL Transfers, Strength& Weakness
பழமொழி • 15 minutes ago