32 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports| Kabaadi| School sports| Champions | Tiruppur திருப்பூர் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வடக்கு குறுமைய மாணவர் கபடி போட்டி நடந்தது. மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் போட்டி நடத்தப்பட்டது. பள்ளி முதல்வர் சுதா போட்டிகளை துவக்கி வைத்தார். 32 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் போட்டி நடந்தது. 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில், செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் நெசவாளர் காலனி மாநகராட்சி பள்ளி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டி தொடர்ந்து நடக்கிறது விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
நாமக்கல் • 6 minutes ago