தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பின் ஆளுங்கட்சியின் விருப்பத்துக்கு பஸ்களின் வண்ணங்கள் மாற்றப்படுவது வழக்கம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அரசு பஸ்கள் பச்சை நிறத்துக்கு மாறின. அதன் பின் திமுக - அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்த நிலையில் பஸ்களின் நிறம் மாறவில்லை. திமுக ஆட்சியில் பெண்களுக்கான பஸ்களில் பிங்க் நிறம் அடிக்கப்பட்டது. இப்போது தவெக ஆட்சி அமைத்த நிலையில் பஸ்களின் நிறத்தில் அக்கட்சி கை வைத்துள்ளது. சேலம் டிப்போவில் 492 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 15 ஆண்டுகளை கடந்த பஸ்களுக்கு பதிலாக புது பஸ்கள் மாற்றப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 25 பஸ்கள் தவெக கட்சியின் கொடி வண்ணத்தில் இயக்குவதற்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. சேலம் போக்குவரத்து அதிகாரிகளிடம் இது குறித்து கேட்ட போது 25 புதிய டவுன் பஸ்கள் வந்துள்ளன. மக்களின் கோரிக்கையை ஏற்று பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்களின் வண்ணம் குறித்து எதுவும் தெரியாது என்றனர். #TVK | #GovtBus | #SalemBusDepo | #TNGovt | #Transport | #GovtBusColour | #TVKColour | #BusColour
subramanian3 hour(s) ago
சிமிட்டி கலர்ல வண்ணம் பூசி விட்டால் பஸ் ஓடாதா ? ஜனங்கள் ஏற மாட்டாங்களா? எதற்காக வீண் செலவு?
GraceTA17 hour(s) ago
மஞ்சள் சிவப்பு நிறம் கலைஞர் கால சிற்றுந்து நிறம் போல உள்ளது

பிற விளையாட்டு • 5 minutes ago

தமிழகம் • 2 minutes ago

கிரிக்கெட் • 11 minutes ago

பிற விளையாட்டு • 9 minutes ago

பேச்சு, பேட்டி, அறிக்கை • 38 minutes ago

இந்தியா • 2 minutes ago

கிரிக்கெட் • 8 minutes ago

கிரிக்கெட் • 4 minutes ago